மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாசமலர் தொடரில் பாசக்கார தங்கையாக நடித்து வருபவர் ஷாம்லி. இவர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள ஓம் சாந்தி ஓம் படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர மேலும் சில படவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளதாம். ஆனால், சின்னத்திரையிலேயே பிசியாக இருப்பதால் சினிமாவை அவரால் ஏற்க முடியவில்லையாம்.
இதுகுறித்து ஷாம்லி மேலும் கூறும்போது, நான் சின்னத்திரையில் என்ட்ரி ஆனதில் இருந்தே பிசியாகத்தான் இருக்கிறேன். அப்போது சில தொடர்களில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க அழைப்பார்கள். ஆனால் அவர்கள் கால்சீட் கேட்கும் நேரத்தில் நான் சீரியல்களில் பிசியாக இருப்பேன். அப்படி பல சினிமா வாயப்புகள் நழுவிப்போய் உள்ளன. அதில் நடித்த ஒரு படம் ஓம் சாந்தி ஓம்.
மேலும், சினிமாவில் நடிக்க அழைப்பவர்கள் நடிக்க தெரியுமா? என்று கேட்பதை விட கிளாமராக நடிப்பீர்களா? என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அதுவே எனக்கு பிடிக்கவில்லை. அதோடு சீரியல்களில் நடித்து நல்லதொரு இமேஜ் உள்ளது. அதை சினிமாவில் நடித்து கெடுத்துக்கொள்ள வேண்டுமா? என்றும் நினைக்கிறேன். அதனால் சில படங்களில் கதாநாயகியாக நடிக்க கேட்டபோதுகூட, எனக்கு ஏதாவது நல்ல கேரக்டர் இருந்தால் கொடுங்கள் என்கிறேன். ஆனால் அப்படி நான் கேட்டதும் போய் விடுபவர்கள் திரும்பி வருவதில்லை என்று கூறும் ஷாம்லி, என்னைக்கேட்டால் சீரியல்களில் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது. திருப்தியாகவும் உள்ளது. அதனால், எதிர்காலத்தில் டைட்டில் வேடங்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார்.