ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
ராதிகா சரத்குமாரின் ரேடான் டி.வி. நிறுவனம் லண்டன் தமிழ் சேனலான ஐபிசிக்கு யாழினி என்ற தொடரை தயாரித்து கொடுக்கிறது. இதனை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது, இந்த தொடரில் யாழினியாக நடிக்கிறார் திவ்யா. இதுபற்றி அவர் கூறியதாவது:
மரகத வீனை தொடர் என் கேரியரில் மிகவும் முக்கியமானது. நான் நடித்து வரும் காயத்ரி கேரக்டருக்கு நல்ல மரியாதையும் அதன் மூலம் எனக்கு நல்ல பெயரும் கிடைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் யாழினி வாய்ப்பு வந்தது. சென்னை லண்டன் என்று மாறி மாறி பறந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். தமிழ் சீரியல்களை வெளிநாட்டு மக்கள் ரசித்து பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக அறிந்தேன். சின்னத்திரைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. விதவிதமான கேரக்டர்களில் நடித்து விட்டேன். படையப்பா நீலாம்பரி மாதிரி ஒரு திமிர்பிடித்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்கிறார் திவ்யா.