தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் கடந்த நான்கு வருடங்களாக ஓவியக் கலைஞர் சாந்தனு ஹசரிகா என்பவருடன் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒருவர் மற்றொருவரை 'அன்பாலோ' செய்த பின்புதான் இது தெரிய வந்துள்ளது.
சாந்தனு ஹசரிகாவைப் பிரிவதற்கு முன்பாக 2019ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞரான மைக்கேல் கோர்சேல் என்பவரைப் பிரிந்தார் ஸ்ருதிஹாசன். பிரிவதற்கு முன்பாக இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தார்கள். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்விற்குக் கூட மைக்கேலை அழைத்து வந்து அப்பா கமல்ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதிஹாசன்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சாந்தனு ஹசரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டாராம் ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரது பிரிவுக்கு என்ன காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் விசாரித்த போது திருமணம் பற்றிய விவகாரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள சாந்தனுவிடம் தெரிவித்தாராம். ஆனால், அதைத் தள்ளிப் போடும் முடிவில் அவர் இருந்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.