மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் கடந்த நான்கு வருடங்களாக ஓவியக் கலைஞர் சாந்தனு ஹசரிகா என்பவருடன் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒருவர் மற்றொருவரை 'அன்பாலோ' செய்த பின்புதான் இது தெரிய வந்துள்ளது.
சாந்தனு ஹசரிகாவைப் பிரிவதற்கு முன்பாக 2019ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞரான மைக்கேல் கோர்சேல் என்பவரைப் பிரிந்தார் ஸ்ருதிஹாசன். பிரிவதற்கு முன்பாக இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தார்கள். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்விற்குக் கூட மைக்கேலை அழைத்து வந்து அப்பா கமல்ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதிஹாசன்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சாந்தனு ஹசரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டாராம் ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரது பிரிவுக்கு என்ன காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் விசாரித்த போது திருமணம் பற்றிய விவகாரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள சாந்தனுவிடம் தெரிவித்தாராம். ஆனால், அதைத் தள்ளிப் போடும் முடிவில் அவர் இருந்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.