‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் கடந்த நான்கு வருடங்களாக ஓவியக் கலைஞர் சாந்தனு ஹசரிகா என்பவருடன் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒருவர் மற்றொருவரை 'அன்பாலோ' செய்த பின்புதான் இது தெரிய வந்துள்ளது.
சாந்தனு ஹசரிகாவைப் பிரிவதற்கு முன்பாக 2019ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞரான மைக்கேல் கோர்சேல் என்பவரைப் பிரிந்தார் ஸ்ருதிஹாசன். பிரிவதற்கு முன்பாக இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தார்கள். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்விற்குக் கூட மைக்கேலை அழைத்து வந்து அப்பா கமல்ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதிஹாசன்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சாந்தனு ஹசரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டாராம் ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரது பிரிவுக்கு என்ன காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் விசாரித்த போது திருமணம் பற்றிய விவகாரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள சாந்தனுவிடம் தெரிவித்தாராம். ஆனால், அதைத் தள்ளிப் போடும் முடிவில் அவர் இருந்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.