மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒருகாலத்தில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் கலக்கியவர் ஜோதிலட்சுமி. 300 படங்களுக்கு மேல் ஆடியுள்ளார். 50 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்துள்ளார். வயதாகிவிட்டதால் ஆடுவதை குறைத்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
பல வருடங்களுக்கு முன்பு சரிகம நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பிய வேலன் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இப்போது அதே சரிகம நிறுவனம் தயாரிக்கும் வள்ளி தொடரில் நடிக்க வந்திருக்கிறார். மர்மமான பின்னணி கொண்ட டெரர் பாட்டியாக நடிக்கிறார்.
"நடிப்பை விட்டு நான் எப்போதுமே விலகியதில்லை. சில நாள் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றியது. அதனால் சின்ன பிரேக் எடுத்துக் கொண்டேன். வள்ளியில் நல்ல கேரக்டர் கிடைத்தது. சரிகம முக்கியமான நல்ல நிறுவனம் அதுதான் மீண்டும் வந்துவிட்டேன். மக்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் உண்மையான சந்தோஷம். அதை விட முடியுமா" என்கிறார் ஜோதிலட்சுமி.