மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திரைப்பட நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பதைப்போன்று சின்னத்திரை நடிகர்களுக்கும் தனியாக சங்கம் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக நளினி உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நளினி தலைவர் ஆனார். ஆனால் நளினி தலைமையிலான நிர்வாகிகள் மீது சின்னத்திரை நடிகர்களுக்கு அதிருப்தி உள்ளது. நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இதனை தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள... சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போது இரண்டு கோஷ்டிகள் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் தலைவர் நளினி, துணை தலைவர் மனோபாலா, செயலாளர் பூவிலங்கு மோகன், இணை செயலாளர் பாவனா ஆகியோர் நேற்று (மே 10) திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். ராஜினிமா கடிதத்தை துணை தலைவர் ராஜ்காந்திடம் கொடுத்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த பிரச்னையும் வேண்டாம் பதவியை தொடருங்கள் என்று பலரும் வற்புறுத்தியதை தொடர்ந்து ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.
இதுகுறித்து நளினி கூறும்போது "எனக்கு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பால் என்னால் சங்க பணிகளை செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் பதவியை ராஜினிமா செய்தேன். நான் நீடிக்க வேண்டும் என்று மூத்த உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றேன்" என்றார்.