மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பல ஆண்டுகளாகவே விஜய் டி.வியில் ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களாக நடந்து வருகிறது. அதில், டீன்ஏஜ் பசங்க மட்டுமே பாடி வந்தனர். பல சுற்றில் அவர்கள் பாடுவதை பிரபல பாடகர் பாடகிகள் நீதிபதிகளாக அமர்ந்து சிறந்த ஜூனியர் சிங்கர்களை தேர்வு செய்து வந்தனர். இறுதி சுற்றுக்கு தேர்ச்சி பெறும் பாடகர்களுக்கு நேயர்களை வாக்களிக்க வைத்து அந்த அடிப்படையில் யார் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர் என்பதை தேர்வு செய்து அவர்களுக்கு வீடு, தங்கம், கார் என பரிசுகளை அளித்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை டீன்ஏஜ் பிள்ளைகளை மட்டுமே பாட வைத்து ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி இன்னும் சில மாதங்களில் சீனியர் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை நடத்தப்போகிறதாம். அதில் 50 வயதுக்கு மேற்பட்ட பாடகர் பாடகிகள் கலந்து கொள்கிறார்களாம்.
இதுவரை இளவட்ட பாடகர்களை மாவட்ட வாரியாக சென்று செலக்சன் நடத்தி போட்டியில பங்கு பெற வைத்தது போன்று அடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களை செலக்சன் செய்து போட்டி நடத்தப்போகிறார்களாம். இந்த போட்டிக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.