மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணுக்கு பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பல முகங்கள் உண்டு. தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை எனக்கு புதிதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாமலை சீரியலில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு படத் தயாரிப்பில் இறங்கினேன். பல படங்களை தயாரித்தேன். சென்னை 28 தவிர மற்ற எல்லா படங்களும் எனக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்து. ஆரண்ய காண்டம் பட ரிலீசுக்கு பட்ட கஷ்டத்தால் படத் தயாரிப்பையே விட்டு விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் தொடர்ந்து படம் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நான் நடிகன், பாடகன் எந்த மாதிரி வாய்ப்புகள் அமைகிறதோ அதனை பயன்படுத்திக் கொள்கிறேன். என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. அதனால் சீரில்களில் நடிக்கிறேன். என்னை மக்களுக்கு சின்னத்திரை நடிகனாகத்தான் அதிகமாக தெரியும். சீரியல்களில் நடிப்பது சினிமாவில் நடிப்பதை விட கடினமானது. சினிமாவில் ஒரு நாளைக்கு ஒரு சீன்தான் எடுப்பார்கள். சீரியலுக்கு பத்து சீன் வரை எடுப்பார்கள். அதிகமாக ரீடேக் போகாமல் மளமளவென நடிக்க வேண்டும். அந்த கடின உழைப்பு பிடித்திருக்கிறது. அதனால் சீரியல்களில் நடிப்பதை ரசித்து செய்கிறேன். என்றார் சரண்.