சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தமிழில் சுமார் 60 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது. தற்போது புதிதாக வேந்தர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பை செய்து வந்த வேந்தர் தொலைக்காட்சி.நேற்று (ஆகஸ்ட் 24) முதல் முறைப்படியான ஒளிபரப்பை துவங்கியுள்ளது. எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்து வரும் மற்றுமொரு தொலைக்காட்சி இது.
இதுகுறித்து வேந்தர் தொலைக்காட்சி தலைவரும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வேந்தருமான பாரிவேந்தர் கூறியதாவது: வேந்தர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, ஆண் பெண் இருபாலரும் ரசிக்கத் தக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மரபு, நெறிகளுக்கு மதிப்பளித்து முழு குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளோம்.
இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், குவைத், மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலும் வேந்தர் தொலைக்காட்சியை காணலாம். எல்லா கேபிள் நெட் ஒர்க் மூலமாகவும், டிடிஎச் மூலமாகவும் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்றார்.
வேந்தர் தொலைக்காட்சியில் வேந்தர் வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு திருமணம் நடத்த 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் என்ற நிகழ்ச்சியை நடிகை குஷ்பு நடத்துகிறார்.