விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தமிழில் சுமார் 60 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது. தற்போது புதிதாக வேந்தர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பை செய்து வந்த வேந்தர் தொலைக்காட்சி.நேற்று (ஆகஸ்ட் 24) முதல் முறைப்படியான ஒளிபரப்பை துவங்கியுள்ளது. எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்து வரும் மற்றுமொரு தொலைக்காட்சி இது.
இதுகுறித்து வேந்தர் தொலைக்காட்சி தலைவரும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வேந்தருமான பாரிவேந்தர் கூறியதாவது: வேந்தர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, ஆண் பெண் இருபாலரும் ரசிக்கத் தக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மரபு, நெறிகளுக்கு மதிப்பளித்து முழு குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளோம்.
இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், குவைத், மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலும் வேந்தர் தொலைக்காட்சியை காணலாம். எல்லா கேபிள் நெட் ஒர்க் மூலமாகவும், டிடிஎச் மூலமாகவும் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்றார்.
வேந்தர் தொலைக்காட்சியில் வேந்தர் வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு திருமணம் நடத்த 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் என்ற நிகழ்ச்சியை நடிகை குஷ்பு நடத்துகிறார்.