மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சொந்த பந்தம், உயிர்மை, சித்திரம் பேசுதடி தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அஸ்ருதா. தெகிடி படத்தில் ஜனனி அய்யரின் தோழியாகவும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் ஜெய்யின் முறைப்பெண்ணாகவும் நடித்தார். தற்போது கடல் தந்த காவியம் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிவிட்டார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்து வரும் தொடர்களில் நான் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் எனது கேரக்டர் முக்கியமானதாக இருக்கிறது. சீரியல்களில் எனது நடிப்பை பார்த்துதான் சினிமா வாய்ப்புகள் வந்தது. இப்போது கடல் தந்த காவியம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். வடக்கன்குளம் மேரி மாதாவின் அற்புதங்களை சொல்லும் பக்திப் படம். இந்த படத்தில் நான் ஹீரோயினாக அறிமுகமானது நான் செய்த பாக்கியம். என்கிறார் அஸ்ருதா.