மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் டென் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர் மைதிலி. கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலும் செய்தி வாசித்து விட்டார். அவரது செய்தி வாசிப்பின் உச்சரிப்பையும், அழகையும் பார்த்து நிறைய சினிமா வாய்ப்புகள் வந்ததாம். அதனை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி மைதிலி கூறியிருப்பதாவது: தொலைக்காட்சியில் பணியாற்றுவதுதான் எனது லட்சியமாக இருந்தது. அதுவும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றத்தான் ஆசை. அப்படியே பணியாற்றினேன். அப்புறம் நண்பர்களின் வற்புறுத்தலால் தொகுப்பாளியானேன். கேமராவுக்கு முன்பு வந்ததுமே செய்தி வாசிப்பாளராகத்தான் ஆசைப் பட்டேன். அதற்கென பயிற்சி எடுத்துக் கொண்டு செய்தி வாசிப்பாளராகிவிட்டேன்.
முன்னணி சேனல்களில் பணியாற்றி இருக்கிறேன். இப்போதும் செய்தி வாசிப்பாளராகத்தான் தொடர்கிறேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை. நான் சினிமாவில் நடிப்பது அம்மாவுக்கு பிடிக்காது. அம்மாவுக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன். கடைசிவரை என்னை சின்னத்திரையில்தான் பார்க்கலாம். அதுவும் செய்தி வாசிப்பாளராகத்தான் என்கிறார்.