மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
80களில் ஒவ்வொரு தமிழ் ரசிகனையும் தன் அழகால் கட்டிப்போட்டவர் ராதா. தென்னிந்திய சினிமாவில் பத்து ஆண்டுகள் அசைக்க முடியாத கனவு கன்னியாக வலம் வந்தவர். தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவரது வாரிசுகள் துளசியும், கார்த்திகாவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ராதாவுக்கு அம்மா, அத்தை கேரக்டர்கள் வரிசை கட்டி நிற்கிறது. ஆனாலும் ராதா அவைகளை ஒப்புக் கொள்ளாமமல் வாரத்திற்கு மூன்று நாட்கள் மும்பையிலிருந்து பறந்து வந்து தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து விட்டு மீண்டும் மும்பைக்கு பறந்து விடுகிறார்.
ஏன் இந்த மாற்றம் என்பதற்கு ராதா அளித்துள்ள விளக்கம் இது... "நடிக்க வர்றதுக்கு முன்னாடியே டான்சுன்னா எனக்கு வெறி. பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு ஈர்ப்பு. சினிமாவில் நடிக்க வந்ததே பாட்டுக்கு டான்ஸ் ஆடலாமே என்பதற்காகத்தான். அந்த வேகமும், ஆர்வமும் இப்போதும் குறையவில்லை. அதனால்தான் நடிப்பதை விட இந்த நிகழ்ச்சியில் என்னால் முழுமனதோடு ஈடுபட முடிகிறது. என்னை விட பிரமாதமான டான்சர்களை என் கண்முன்னால் பார்க்கிறேன். நான் நடித்த பாடல் காட்சிகளை அவர்கள் ஆடும்போது பழைய நினைவுகளில் மூழ்கிவிடுகிறேன்.
நடனம் பற்றிய அடிப்படையான விஷயங்களோடு உள்ளே வந்து நல்ல டான்சர்களாக வெளியேறும் அற்புத நிகழ்ச்சி இது. அவர்களின் வளர்ச்சிக்கு என்னோட விமர்சனமும், மதிப்பீடும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதால் உளப்பூர்வமான சந்தோஷம் கிடைக்கிறது. மும்பையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காக கிளம்பி வரும்போது சொந்த ஊருக்கு வருவதைப்போல உணர்கிறேன்" என்கிறார் ராதா.