மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியில் ஹிருத்திக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி படம் ஜோதா அக்பர். அக்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. இப்போது அதே ஜோதா அக்பர் என்ற பெயரில் மெகா சீரியல் ஒன்றும் உருவாகியுள்ளது. சினிமாவை காட்டிலும், டி.வி. சீரியல் இன்னும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. பிரபல இந்தி தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தான் இந்த தொடரை தயாரிக்கிறார். அக்பரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்த தொடர் உருவாகியுள்ளது. சமீபத்தில் தான் இந்த தொடரை அறிமுகம் செய்து வைத்தார் ஏக்தா கபூர். தற்போது இந்தியில், ஜீ டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் இத்தொடரை விரைவில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து ஒளிப்பரப்ப இருக்கிறார்கள்.