கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை | கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் |
மக்கள் மனதில் இடம்பிடித்த பாக்கியலெட்சுமி தொடர் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் கடந்த வருடமே சீரியலை விட்டு விலகுவதாக பதிவிட்டிருந்தார். ஆனால், ரசிகர்களோ பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷ் தொடர்ந்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். இதனையடுத்து சீரியலை விட்டு விலகும் முடிவிலிருந்து பின்வாங்கிய சதீஷ், தற்போது மீண்டும் பாக்கியலெட்சுமி தொடரை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாக்கியலெட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் வந்துவிட்டது' என்ற கேப்ஷனுடன் 'ஒரு பொய்யை முத்தமிடுவதை விட உண்மையிடம் அரை வாங்கிக் கொள்ளலாம்' என குறிப்பிட்டுள்ளார்.