பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? |

பிக்பாஸ் சீசன் 8 மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான விக்ரமன் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது சரி என நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரமன், 'ஒரு முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு பிரச்னை வந்தது. அப்போது கமல்ஹாசன் நாம் அனைவரும் உழைப்பது சாப்பிட தான். அந்த சாப்பாட்டை அவருக்கு பஞ்சம் இல்லாமல் கொடுங்கள். வேண்டுமானால் என் சம்பளத்தை குறைத்துக் கொண்டு அந்த பணத்தில் அவர்களுக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கூறினார்.
இதுபோல் வேறு யாரும் செய்வார்களா? என்று தெரியவில்ல. விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகர். அவர் நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்கிறார் என்பதை வைத்து தான் கருத்து சொல்ல முடியும். கமல்ஹாசனுக்கே அதிகமான விமர்சனங்கள் வந்தது. அதுபோல விஜய் சேதுபதிக்கு விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருக்க வேண்டும்' என்று விக்ரமன் கூறியுள்ளார்.