தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிக்பாஸ் சீசன் 8 மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான விக்ரமன் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது சரி என நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரமன், 'ஒரு முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு பிரச்னை வந்தது. அப்போது கமல்ஹாசன் நாம் அனைவரும் உழைப்பது சாப்பிட தான். அந்த சாப்பாட்டை அவருக்கு பஞ்சம் இல்லாமல் கொடுங்கள். வேண்டுமானால் என் சம்பளத்தை குறைத்துக் கொண்டு அந்த பணத்தில் அவர்களுக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கூறினார்.
இதுபோல் வேறு யாரும் செய்வார்களா? என்று தெரியவில்ல. விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகர். அவர் நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்கிறார் என்பதை வைத்து தான் கருத்து சொல்ல முடியும். கமல்ஹாசனுக்கே அதிகமான விமர்சனங்கள் வந்தது. அதுபோல விஜய் சேதுபதிக்கு விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருக்க வேண்டும்' என்று விக்ரமன் கூறியுள்ளார்.