பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானவர் விக்ரமன். தவணை முறை வாழ்க்கை, விண்ணைத்தாண்டி வருவாயா, ஸ்டார் வார் தொடர்களில் நடித்தார். பிக்பாஸ் 6வது சீசன் மூலம் புகழ்பெற்றார். தற்போது அவர் சினிமாவில் நாயகன் ஆகியிருக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ப்ரீத்தி கரிகாலன் இயக்குகிறார். சுப்ரிதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகரும் நடிக்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் கூறும்போது, "எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார். இன்றைய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் கலர்புல் எண்டர்டெயினராக உருவாக்குகிறோம். இசையும் விஷூவலும் அருமையாக இருக்கும். எளிமையான அதேசமயம் தனித்துவமான கதையாக உருவாகிறது" என்றார்.