100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

பிரபல சீரியல் நடிகை ஷாலினி ஜீ தமிழில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'சூப்பர் மாம்' உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். சில வருடங்களுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்ததை போட்டோஷூட் வெளியிட்டு கொண்டாடிய ஷாலினி, சிங்கிளாக சுதந்திரமாக இருப்பதை பெரிதும் விரும்புவதாக பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
ஆனால், சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தனக்காகவும், தன் குழந்தைக்காகவும் நிச்சயம் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது சிங்கிளாக இருப்பது தனிப்பட்ட முறையிலும், அலுவல் ரீதியிலும் சோர்வடைய செய்வதாக பதிவிட்டுள்ளார்.




