ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய நடிகராக வலம் வருபவர் கோவிந்தா. காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாம் கலந்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி குறிப்பிடத்தக்க ரசிகர்களையும் வைத்திருப்பவர். தமிழில் த்ரீ ரோசஸ் என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 2015ல் இருந்து இவர் படங்களின் நடிப்பது குறைந்து போய் அதற்குப்பின் வெறும் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். குறிப்பாக கடந்த ஆறு வருடங்களாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் அவரது மனைவி சுனிதா அஹுஜா விவாகரத்திற்கு விண்ணப்பித்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தா 1986ல் சினிமாவில் நுழைந்தார். அடுத்த வருடமே சுனிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா இந்த செய்தி குறித்து கூறும்போது, “சுனிதா அஹுஜா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது தெரியும். அது விவாகரத்து மனுவா என்று எங்களுக்கு தெரியாது. அது குறித்து எங்களுக்கு எதுவும் இதுவரை நோட்டீஸ் வரவில்லை” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் கடந்த சில நாட்களாகவே கோவிந்தாவுக்கு நான் தான் நடிப்பு, நடனம் கற்றுக்கொடுத்தேன் என்பது போல சில கருத்துக்களை சுனிதா கூறி வருகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் மேனேஜர் சசி சின்ஹா. அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாகவே கோவிந்தா தனியாக ஒரு பங்களாவிலும் சுனிதா ஒரு பிளாட்டிலும் வசித்து வருகிறார்கள் என்றாலும் கூட அதற்காக அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை என்றும் கோவிந்தாவின் இயல்பான குணாதிசயமே இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார் சசி சின்ஹா.




