முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி |
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்திற்கான காரணம் தெரியாவிட்டாலும், சாய்ரா பானு பெரும் மனவேதனையில் இந்த முடிவை எடுத்திருப்பதும், ஏ.ஆர்.ரஹ்மான் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதையும் அவர்களது பதிவுகள் காட்டுகிறது.
இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோல்கட்டாவை சேர்ந்தவர் மோகினி டே, 28. கிடார் கலைஞரான இவர், 10 வயது முதல் கிடார் வாசித்து வருகிறார். இவர் ஜாகிர் உசேன், கியுன்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களுடன், இணைந்து பணியாற்றி உள்ளார். இசையமைப்பார், ஆல்பம் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டவர். பல ஆண்டுகளாக ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வருகிறார். ரஹ்மானுக்கு பிடித்த இசை கலைஞர்களில் இவரும் ஒருவர்.
அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'நானும், மார்க்கும், பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும், தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது' என, தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கோச்சடையான் படத்தில், மோகினி டே இணைந்து பணியாற்றி உள்ளார். அடுத்தடுத்த இந்த விவாகரத்துகளால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சனங்களும் புதிய புதிய கதைகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.