அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்திற்கான காரணம் தெரியாவிட்டாலும், சாய்ரா பானு பெரும் மனவேதனையில் இந்த முடிவை எடுத்திருப்பதும், ஏ.ஆர்.ரஹ்மான் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதையும் அவர்களது பதிவுகள் காட்டுகிறது.
இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோல்கட்டாவை சேர்ந்தவர் மோகினி டே, 28. கிடார் கலைஞரான இவர், 10 வயது முதல் கிடார் வாசித்து வருகிறார். இவர் ஜாகிர் உசேன், கியுன்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களுடன், இணைந்து பணியாற்றி உள்ளார். இசையமைப்பார், ஆல்பம் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டவர். பல ஆண்டுகளாக ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வருகிறார். ரஹ்மானுக்கு பிடித்த இசை கலைஞர்களில் இவரும் ஒருவர்.
அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'நானும், மார்க்கும், பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும், தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது' என, தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கோச்சடையான் படத்தில், மோகினி டே இணைந்து பணியாற்றி உள்ளார். அடுத்தடுத்த இந்த விவாகரத்துகளால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சனங்களும் புதிய புதிய கதைகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.