பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வீஜே மணிமேகலை விலகியிருப்பது சின்னத்திரையில் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பிரியங்காவுக்கு எதிரான அவரது பதிவை பல பிரபலங்கள் ஆதரித்த நிலையில், ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு பல விதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அதில், சிலர் பிரியங்காவால் பாதிகப்பட்டவர் மணிமேகலை மட்டும் இல்லையென்றும் முன்னதாக ஜாக்குலின், பாவனா போன்றவர்கள் கூட பிரியங்காவால் தான் விஜய் டிவியை விட்டு விலகினார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பாவனாவே ஒரு முறை பதிவிட்டுள்ளதாக சில தகவல்களை பகிர, அதை பார்த்த பாவனா, 'நான் அப்படி எதுவும் கூறவில்லை. அப்படி நான் பேசியதாக சொன்ன வீடியோவை காட்டுங்கள். நான் சூப்பர் சிங்கரை விட்டு வெளியேற காரணம், எல்லையை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதற்காகவும், மும்பையில் எனது கணவருடனேயே சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவும் மட்டும் தான்' என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.