கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வீஜே மணிமேகலை விலகியிருப்பது சின்னத்திரையில் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பிரியங்காவுக்கு எதிரான அவரது பதிவை பல பிரபலங்கள் ஆதரித்த நிலையில், ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு பல விதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அதில், சிலர் பிரியங்காவால் பாதிகப்பட்டவர் மணிமேகலை மட்டும் இல்லையென்றும் முன்னதாக ஜாக்குலின், பாவனா போன்றவர்கள் கூட பிரியங்காவால் தான் விஜய் டிவியை விட்டு விலகினார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பாவனாவே ஒரு முறை பதிவிட்டுள்ளதாக சில தகவல்களை பகிர, அதை பார்த்த பாவனா, 'நான் அப்படி எதுவும் கூறவில்லை. அப்படி நான் பேசியதாக சொன்ன வீடியோவை காட்டுங்கள். நான் சூப்பர் சிங்கரை விட்டு வெளியேற காரணம், எல்லையை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதற்காகவும், மும்பையில் எனது கணவருடனேயே சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவும் மட்டும் தான்' என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.