அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகி திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா. இதில், ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சனா நமிதாஸிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல் படத்திலேயே அருமையாக நடித்துவிட்டதாக பலரும் வாழ்த்தி வருகின்றனர். ஆனால், சஞ்சனாவுக்கு கேமரா புதிதல்ல. ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947 என்கிற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சஞ்சனா 6 மாத குழந்தையாக இருக்கும் போதே மெட்டி ஒலி சீரியலில் நடித்திருக்கிறார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தை நட்சத்திரமாக சில சீரியல்களில் நடித்துள்ள சஞ்சனா, கண்ணான கண்ணே, செங்கலம் உள்ளிட்ட சில தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ள சஞ்சனா தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.