பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகி திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா. இதில், ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சனா நமிதாஸிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல் படத்திலேயே அருமையாக நடித்துவிட்டதாக பலரும் வாழ்த்தி வருகின்றனர். ஆனால், சஞ்சனாவுக்கு கேமரா புதிதல்ல. ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947 என்கிற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சஞ்சனா 6 மாத குழந்தையாக இருக்கும் போதே மெட்டி ஒலி சீரியலில் நடித்திருக்கிறார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தை நட்சத்திரமாக சில சீரியல்களில் நடித்துள்ள சஞ்சனா, கண்ணான கண்ணே, செங்கலம் உள்ளிட்ட சில தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ள சஞ்சனா தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.