கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சின்னத்திரையில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த சீரியலில் நடித்த நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருமே சோகத்தில் உள்ளனர். முன்னதாக சுந்தரி சீரியலும் சீக்கிரமாக முடிவுக்கு வந்தது. எனினும், சீசன் 1 முடிந்த கையோடு சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல, எதிர்நீச்சல் தொடரும் சீசன் 2 விரைவில் வர இருப்பதாகவும் வேறொரு சேனலில் அந்த தொடர் ஒளிபரப்பாகும் எனவும் செய்திகள் வலம் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் தொடர் சீசன் 2விலும் நீங்களும் சபரியும் ஜோடியாக நடிக்கிறீர்களா? என அந்த தொடரில் ஜனனியாக நடித்த நாயகி மதுமிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மதுமிதா, 'இப்போது வரை எதிர்நீச்சல் 2 குறித்து எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை' என கூறியுள்ளார்.