காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி அண்மையில் மெட்ரோ பணியின் காரணமாக ஒரு சிறிய கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக சைத்ராவுக்கு எதுவும் ஆகவில்லை. கார் மட்டும் சேதமாகி உள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் காரின் புகைப்படங்களை வெளியிட்டு மெட்ரோ பணியாளர்களின் அலட்சியத்தை அதிருப்தியுடன் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் 'போரூர் மேம்பாலத்தின் அடியில் எனது கார் நிற்கும் போது மெட்ரோ பணிகளுக்காக போடப்படும் சிமெண்ட் கலவை கார் மேல் விழுந்ததால் கார் சேதமடைந்துள்ளது. இது அந்த இடத்தில் செல்லும் பைக்கிலோ அல்லது நடந்தோ செல்பவர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். சிலரின் அஜாக்ரதையால் பல உயிர்களை நாம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், கட்டுமான பணிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தவும் நான் அதிகாரிகளிடம் கேட்டுகொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் இந்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? பொது பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்கு மெட்ரோ பணி ஒப்பந்ததார்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.




