2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி அண்மையில் மெட்ரோ பணியின் காரணமாக ஒரு சிறிய கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக சைத்ராவுக்கு எதுவும் ஆகவில்லை. கார் மட்டும் சேதமாகி உள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் காரின் புகைப்படங்களை வெளியிட்டு மெட்ரோ பணியாளர்களின் அலட்சியத்தை அதிருப்தியுடன் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் 'போரூர் மேம்பாலத்தின் அடியில் எனது கார் நிற்கும் போது மெட்ரோ பணிகளுக்காக போடப்படும் சிமெண்ட் கலவை கார் மேல் விழுந்ததால் கார் சேதமடைந்துள்ளது. இது அந்த இடத்தில் செல்லும் பைக்கிலோ அல்லது நடந்தோ செல்பவர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். சிலரின் அஜாக்ரதையால் பல உயிர்களை நாம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், கட்டுமான பணிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தவும் நான் அதிகாரிகளிடம் கேட்டுகொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் இந்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? பொது பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்கு மெட்ரோ பணி ஒப்பந்ததார்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.