மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டியின் புகழ் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரில் ரீப்ளேஸ்மெண்ட் ஹீரோயினாக அறிமுகமான சைத்ரா ரெட்டி, தொடர்ந்து சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 'கயல்' தொடரில் கலக்கி வரும் சைத்ரா, சினிமா வட்டாரங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் அஜித் நடித்த வலிமை படத்தில் சைத்ரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக அவரது புகழ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. தற்போது அவர் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுடனும் கமர்ஷியல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விரைவில் சைத்ரா சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.