மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டியின் புகழ் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரில் ரீப்ளேஸ்மெண்ட் ஹீரோயினாக அறிமுகமான சைத்ரா ரெட்டி, தொடர்ந்து சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 'கயல்' தொடரில் கலக்கி வரும் சைத்ரா, சினிமா வட்டாரங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் அஜித் நடித்த வலிமை படத்தில் சைத்ரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக அவரது புகழ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. தற்போது அவர் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுடனும் கமர்ஷியல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விரைவில் சைத்ரா சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.