மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
பிரபல செய்திவாசிப்பாளரான மெர்சி சித்ரா அண்மையில் வெளியான துணிவு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வரும் மெர்சி சித்ரா, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், அவர் 'மீடியாவிற்குள் நான் வரும் போது இப்படியெல்லாம் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது எனக்கு எந்த பிரச்னையும் நடக்கவில்லை. எனவே தைரியத்துடன் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தேன். பலவிதமான எதிர்ப்புகள் வந்தது. சிலர் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றார்கள், சிலர் தவறாக பேசினார்கள், சிலர் இதை செய்தால் தான் வாய்ப்பு என்றார்கள். இப்படி மறைமுகமாகவும் நேரடியாகவும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். அட்ஜெஸ்மெண்ட் செய்யவில்லை என்றால் சிலர் போட்டோவில் நான் நன்றாக இருப்பதாகவும் நேரில் கருப்பாக இருப்பதாகவும் விமர்சித்து ஒதுக்கினார்கள். இப்படி பல தடைகளை தாண்டி தான் துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது' என்று அதில் கூறியுள்ளார். மீடியாவில் செய்திவாசிக்கும் ஒரு பெண்ணுக்கே இப்படி என்றால், எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவோடு வரும் பெண்களின் நிலை தான் என்ன?