'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரை நடிகர் சதீஷ் விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், காமெடி என ஒட்டுமொத்த உருவமாக கோபி ரோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கச்சிதமாக பெர்பார்மன்ஸ் செய்து வரும் சதீஷுக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் சதீஷ், பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் வருத்தமடைந்த ரசிகர்கள் சதீஷை மீண்டும் கோபி கதாபாத்திரத்தில் தொடரும்படி வேண்டுகோள் வைத்து வந்தனர்.
சக நடிகரான விஷாலும் 'என் அப்பாவை போகவிடமாட்டேன்' என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டுள்ள சதீஷ், 'நான் உணர்ச்சிவசப்பட்டு விலகுவதாக கூறிவிட்டேன். எனக்குள் பெர்சனலாக இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனி நான் கோபியாக பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பேன்' என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.