ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? |

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மதுமிதா ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பிரியாத வரம் வேண்டும்' சீரியலின் மூலம் தமிழில் அறிமுகமானார். தென்னிந்திய மொழிகளிலும் ஆக்டிவாக பல சீரியல்களில் நடித்து வருகிறார். இருப்பினும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்நீச்சல் ஜனனி கதாபாத்திரம் தான் அவரை கொண்டு போய் சேர்த்தது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு விருது நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது எதிர்நீச்சல் தொடரில் மதுமிதா நடித்து வரும் ஜனனி கதாபாத்திரத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் தொடருக்கு குடும்ப பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்கள், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர். வழக்கமான மசாலா சீரியலாக இல்லாமல் எதார்த்த கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். அந்த தொடரின் ஹீரோயினான மதுமிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டதை சீரியல் குழுவினர், ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




