வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தமிழில் சில சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது செவ்வந்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அந்த திருமணத்தின் மூலம் ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இதனையடுத்து அர்னவை அவசர அவசரமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு தற்பொது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியே வசித்து வந்த திவ்யாவுக்கு சீரியல் நடிகர்கள் தான் வளைகாப்பு நிகழ்ச்சிகளை கூட செய்திருந்தனர். இந்நிலையில், திவ்யா தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் உருக்கமான பதிவிட்டுள்ள திவ்யா, குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்த படி போட்டோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாய் சேய் நலமாக இருக்க வேண்டுமென பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




