மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தமிழில் சில சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது செவ்வந்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அந்த திருமணத்தின் மூலம் ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இதனையடுத்து அர்னவை அவசர அவசரமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு தற்பொது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியே வசித்து வந்த திவ்யாவுக்கு சீரியல் நடிகர்கள் தான் வளைகாப்பு நிகழ்ச்சிகளை கூட செய்திருந்தனர். இந்நிலையில், திவ்யா தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் உருக்கமான பதிவிட்டுள்ள திவ்யா, குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்த படி போட்டோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாய் சேய் நலமாக இருக்க வேண்டுமென பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.