22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மருத்துவர் ஷர்மிளா காலப்போக்கில் சின்னத்திரை சீரியல்களிலும் படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்து நடிகையாக பிரபலமானார். சமீபகாலங்களில் அரசியல், சமூகம், பெண்ணியம் சார்ந்த கருத்துகளை பொதுவெளியில் பேசி வருகிறார். இந்நிலையில், கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து அண்மையில் பேட்டி அளித்துள்ள ஷர்மிளா, கல்லூரிக்கும் பேராசிரியருக்கும் ஆதரவாக பேசிவரும் பிக்பாஸ் அபிராமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
'கலாஷேத்ரா என்ற பெயர் கூட வாயில் நுழையாதவர்கள் அதை பற்றி குற்றம் சொல்கின்றனர்' என அபிராமி பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய ஷர்மிளா, இதன் மூலம் கலாஷேத்ரா ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமானது. இதில் கேள்வி கேட்க மற்றவர்கள் யார்? என்பது போல் அபிராமி பேசியிருக்கிறார். அபிராமியின் இந்த பேச்சு அவரது ஆணவத்தை தான் காட்டுகிறது. மத்திய அரசு தரும் நிதியில் தான் கலாஷேத்ரா செயல்படுகிறது. எனவே, கேள்வி கேட்க்ககூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? நம் சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு தான் குரல் கொடுக்கிறோம் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என ஷர்மிளா கூறியுள்ளார்.