நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

மருத்துவர் ஷர்மிளா காலப்போக்கில் சின்னத்திரை சீரியல்களிலும் படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்து நடிகையாக பிரபலமானார். சமீபகாலங்களில் அரசியல், சமூகம், பெண்ணியம் சார்ந்த கருத்துகளை பொதுவெளியில் பேசி வருகிறார். இந்நிலையில், கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து அண்மையில் பேட்டி அளித்துள்ள ஷர்மிளா, கல்லூரிக்கும் பேராசிரியருக்கும் ஆதரவாக பேசிவரும் பிக்பாஸ் அபிராமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
'கலாஷேத்ரா என்ற பெயர் கூட வாயில் நுழையாதவர்கள் அதை பற்றி குற்றம் சொல்கின்றனர்' என அபிராமி பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய ஷர்மிளா, இதன் மூலம் கலாஷேத்ரா ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமானது. இதில் கேள்வி கேட்க மற்றவர்கள் யார்? என்பது போல் அபிராமி பேசியிருக்கிறார். அபிராமியின் இந்த பேச்சு அவரது ஆணவத்தை தான் காட்டுகிறது. மத்திய அரசு தரும் நிதியில் தான் கலாஷேத்ரா செயல்படுகிறது. எனவே, கேள்வி கேட்க்ககூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? நம் சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு தான் குரல் கொடுக்கிறோம் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என ஷர்மிளா கூறியுள்ளார்.