ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு |
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து பிரபலமானவர் நீலிமா ராணி. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழிட்டு வருகிறார். எனவே, சமீபகாலங்களில் அதிகமாக நடிப்பதில்லை. திருமணத்திற்கு பின் தனது கணவரை எந்த அளவிற்கு நீலிமா காதலித்து வருகிறார் என அவரது சோஷியல் மீடியா பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நீலிமா தனது கணவரை தாத்தா என்று சிலர் கிண்டலடிப்பதாக வருத்தப்பட்டுள்ளார். 'என் கணவரின் புகைப்படத்தை பார்த்து எனக்கு அவர் அப்பாவா? தாத்தாவா? என்று கேட்கிறார்கள். என் கணவருக்கு சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி தான். மற்றவர்களுக்காக அதை மறைத்து டை அடித்துக் கொண்டு திரிய வேண்டும் என அவர் நினைப்பதில்லை. நானும் அப்படி விரும்பவில்லை. இயற்கையாக எப்படி இருக்க முடியுமோ, அப்படி இருக்கிறார்' என்று கூறி கண்கலங்கியுள்ளார்.