கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து பிரபலமானவர் நீலிமா ராணி. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழிட்டு வருகிறார். எனவே, சமீபகாலங்களில் அதிகமாக நடிப்பதில்லை. திருமணத்திற்கு பின் தனது கணவரை எந்த அளவிற்கு நீலிமா காதலித்து வருகிறார் என அவரது சோஷியல் மீடியா பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நீலிமா தனது கணவரை தாத்தா என்று சிலர் கிண்டலடிப்பதாக வருத்தப்பட்டுள்ளார். 'என் கணவரின் புகைப்படத்தை பார்த்து எனக்கு அவர் அப்பாவா? தாத்தாவா? என்று கேட்கிறார்கள். என் கணவருக்கு சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி தான். மற்றவர்களுக்காக அதை மறைத்து டை அடித்துக் கொண்டு திரிய வேண்டும் என அவர் நினைப்பதில்லை. நானும் அப்படி விரும்பவில்லை. இயற்கையாக எப்படி இருக்க முடியுமோ, அப்படி இருக்கிறார்' என்று கூறி கண்கலங்கியுள்ளார்.