6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியான இளையராஜா படங்கள் | சந்திரமுகி 2 படத்தில் திரிஷா? | ரத்தம் படத்திற்காக உருவாகும் சிறப்பு பாடல் காட்சி | அட்லியின் 'ஜவான்' படத்தை பற்றி மனம் திறந்த ஷாருக்கான் | கீர்த்தி சுரேஷை ஏமாற்றிய மலையாள படம் | ருத்ரன் படத்திற்காக 10 கிலோ எடை கூடிய லாரன்ஸ் | பிரபாஸின் சலார் படத்தில் நடிக்க பிருத்விராஜ் போட்ட கண்டிஷன் | பாயும் ஒளி நீ எனக்கு டீசர் வெளியீடு | சல்மானைக் கவர்ந்த 'ஊ சொல்றியா மாமா' | 1 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த 'டாப்கன் மேவ்ரிக்' |
தொலைக்காட்சி பிரபலமான நீலிமா ராணி கர்ப்பமாக இருக்கும் போது தடுப்பூசி போட்டால் என்ன ஆகும் என்பதை பகிர்ந்து கொண்டார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் வில்லியாகவும், நாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். திருமணத்திற்கு பின் பெரிதாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். இவருக்கு அதிதி என்ற மூன்று வயது பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக கர்ப்பமுற்றுள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார். இது குறித்து பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதற்கு தற்போது நீலிமா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது, இப்போது நான் கர்ப்பமாக உள்ளேன். குடும்பத்தினர், மருத்துவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தினர். தடுப்பூசி தொப்புள் கொடியையோ, குழந்தையையோ சென்றடையாது. இதை புரிய வைத்தது என் கணவர் தான். அதன் பிறகே தான் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என தெளிவுப்படுத்தினார்.