அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தொலைக்காட்சி பிரபலமான நீலிமா ராணி கர்ப்பமாக இருக்கும் போது தடுப்பூசி போட்டால் என்ன ஆகும் என்பதை பகிர்ந்து கொண்டார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் வில்லியாகவும், நாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். திருமணத்திற்கு பின் பெரிதாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். இவருக்கு அதிதி என்ற மூன்று வயது பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக கர்ப்பமுற்றுள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார். இது குறித்து பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதற்கு தற்போது நீலிமா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது, இப்போது நான் கர்ப்பமாக உள்ளேன். குடும்பத்தினர், மருத்துவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தினர். தடுப்பூசி தொப்புள் கொடியையோ, குழந்தையையோ சென்றடையாது. இதை புரிய வைத்தது என் கணவர் தான். அதன் பிறகே தான் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என தெளிவுப்படுத்தினார்.