கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

ரப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜ் தருண்பால் ஹீரோவாகவும், முக்கிய வேடத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
இப்போது இவர்களுடன் நடிகை அம்மு அபிராமியும், ‛பசங்க' புகழ் கிஷோரும் இணைந்திருக்கிறார்கள். இருவரும், விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸில் இணைந்து நடித்தனர். இப்போது இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் மில்டன் கூறும்போது "அம்முவும், கிஷோரும் தங்கள் கதாபாத்திரங்களை உண்மையின் அடிப்படையில் அற்புதமாக காட்டக்கூடிய திறமை கொண்டவர்கள். அவர்கள் நடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இந்தப் படத்துக்கு தரும் உயிர் துடிப்பை ரசிகர்கள் விரைவில் அனுபவிக்க இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.




