நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
விஜய் மில்டன், ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது ‛கோலி சோடா' படங்களின் தொடர்ச்சியாக இருக்கும். ஏற்கனவே இந்த படத்தில் ஆரி, பரத், சுனில், பால் டப்பா இணைந்திருந்தனர். தொடர்ந்து தற்போது இதில் நடிகை அம்மு அபிராமி இணைந்ததாக படக்குழு இன்று அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா வெப் தொடரில் அம்மு அபிராமி நடித்திருந்தார். இப்போது இரண்டாம் முறையாக விஜய் மில்டன் இயக்கத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.