நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
நடிகர் பரத் 2000மாவது காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தார். அதன் பின்னர் தொடர் தோல்விகளால் அவரது பட வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் அவரது நடிப்பில் வெளிவந்த காளிதாஸ், மிரள் போன்ற படங்கள் அவருக்கு கம்பேக் படங்களாக அமைந்தன. இதனால் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் மில்டன், ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது கோலி சோடா படங்களின் தொடர்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பாடகர் பால் டப்பா, நடிகர் ஆரி ஆகியோர் இணைந்தனர். தற்போது நடிகர் பரத் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.