ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! |
கன்னட சின்னத்திரை நடிகையான மதுமிதா தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பேவரைட்டான நடிகையாக மாறியுள்ளார். முன்னதாக கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏற்கனவே சீரியல்கள் நடித்திருந்தாலும் மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் சீரியலின் ஜனனி கதாபாத்திரம் தனியொரு இடத்தை பெற்று தந்துள்ளது. நன்றாக தமிழ் பேச கற்றுக்கொண்டுள்ள மதுமிதா அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், 'முன்னதாக நடித்த சீரியல்களில் ஓவர் ஆக்ட் செய்வேன். அது அந்த சீரியல்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் எதிர்நீச்சல் தொடர் நிஜவாழ்க்கையுடன் கனக்ட் ஆகிறது. மற்ற சீரியல்களை போல் அல்லாமல் எதிர்நீச்சல் தொடரில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஈஸ்வரி, நந்தினி கதாபாத்திரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். குறிப்பாக மாரிமுத்து அனைவர் வீட்டிலும் இருக்கிறார். மாரிமுத்துவை அடிக்க வேண்டும் என என்னிடமே சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவரிடத்திலும் ரீச்சாகியுள்ளது. இந்த தொடரில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. 10 வருடம் இந்த சீரியல் தொடர்ந்தால் கூட கண்டிப்பாக நடிப்பேன். இங்கேயே செட்டிலாகிவிடுவேன்' என்று கூறியுள்ளார்.