ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் |

ஹிந்தியில் நாகினி போல் தமிழ் சின்னத்திரையில் நாகத்தை வைத்து எடுக்கப்பட்ட பேண்டஸி கதை நந்தினி. அதிக பொருட்செலவில் உருவான இந்த தொடரில் விஜயகுமார், நித்யா ராம், மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த நித்யா ராமுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் கிடைத்தனர்.
நந்தினி தொடர் 2018-ல் முடிவடைந்த பிறகு நித்யா ராம் தமிழில் எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. இதனால் வாடிப்போன ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நித்யா ராம் ஜீ தமிழ் சீரியலில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் அண்ணா என்கிற தொடரில் நித்யா ராம் ஹீரோயினாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சரவணன் மீனாட்சி' செந்தில் நடிக்கிறார். மேலும், குக் வித் கோமாளி, பாக்கியலெட்சுமி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ரித்திகா தமிழ்செல்வியும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நித்யா ராம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரியாவதை ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.