இளையராஜா இசையில் பாடிய முதல் பாடல்: பாடகி நித்யஸ்ரீ மகிழ்ச்சி | வினோத நோய் : கரண் ஜோகர் விளக்கம் | அமேசான் ஓடிடி தளத்திலும் இனி விளம்பரங்கள் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சாந்தினி படம் | பிளாஷ்பேக் : பூனை கண்ணை மறைக்க லென்ஸ் வைத்து நடித்த சாதனா | பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அன்னக்கிளி, இளையராஜா | ஜெயசூர்யாவின் ஆடு 3 படப்பிடிப்பு துவங்கியது | ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு சத்யராஜ் சொன்ன வார்த்தை ; சிலிர்க்கும் லோகேஷ் கனகராஜ் | கேரளாவில் ரூ.100 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் 'தொடரும்' | அது உதவி இயக்குனரின் வேலை ; மோகன்லால் குறித்து பிரமிக்கும் தொடரும் நடிகை |
ஹிந்தியில் நாகினி போல் தமிழ் சின்னத்திரையில் நாகத்தை வைத்து எடுக்கப்பட்ட பேண்டஸி கதை நந்தினி. அதிக பொருட்செலவில் உருவான இந்த தொடரில் விஜயகுமார், நித்யா ராம், மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த நித்யா ராமுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் கிடைத்தனர்.
நந்தினி தொடர் 2018-ல் முடிவடைந்த பிறகு நித்யா ராம் தமிழில் எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. இதனால் வாடிப்போன ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நித்யா ராம் ஜீ தமிழ் சீரியலில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் அண்ணா என்கிற தொடரில் நித்யா ராம் ஹீரோயினாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சரவணன் மீனாட்சி' செந்தில் நடிக்கிறார். மேலும், குக் வித் கோமாளி, பாக்கியலெட்சுமி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ரித்திகா தமிழ்செல்வியும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நித்யா ராம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரியாவதை ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.