பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கலசம் என்ற தொடரில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரித்திகா. பின்னர் நாதஸ்வரம், மாமியார் தேவை, வைதேகி, கல்யாண பரிசு 2 என பல தொடர்களில் நடித்தார் . அதோடு வெண்ணிலா கபடி குழு, வேங்கை, பாலு தம்பி மனசுல, பட்டாளம் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் சனீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரித்திகா, இரண்டு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, மகராசி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த எஸ்.எஸ்.ஆரின் பேரன் ஆரியன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் ஸ்ரித்திகா. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு ஆரியன்- ஸ்ரித்திகா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோவை ஆரியன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.