ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

'புன்னகை பூவே' சீரியலில் கலைவாணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சைத்ரா சக்காரி. முன்னதாக 2019ம் ஆண்டு ஒளிபரப்பான 'தமிழ்ச்செல்வி' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியிருந்த இவர், கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது கலைவாணி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சைத்ரா, திடீரென இந்த சீரியலை விட்டு விலகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சைத்ரா கன்னடத்தில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'சாரதே' என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தமிழில் வெளியான 'செல்லம்மா' தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சாரதே தொடர் தனக்கு அதிக அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதால் தான் அவர் புன்னகை பூவே சீரியலை விட்டு விலகியிருக்கிறார். இனி புன்னகை பூவே தொடரில் அவர் நடித்து வந்த கதபாத்திரத்தில் ஐஸ்வர்யா என்ற நடிகை தொடர்ந்து நடிக்க உள்ளார்.