துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

'புன்னகை பூவே' சீரியலில் கலைவாணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சைத்ரா சக்காரி. முன்னதாக 2019ம் ஆண்டு ஒளிபரப்பான 'தமிழ்ச்செல்வி' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியிருந்த இவர், கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது கலைவாணி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சைத்ரா, திடீரென இந்த சீரியலை விட்டு விலகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சைத்ரா கன்னடத்தில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'சாரதே' என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தமிழில் வெளியான 'செல்லம்மா' தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சாரதே தொடர் தனக்கு அதிக அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதால் தான் அவர் புன்னகை பூவே சீரியலை விட்டு விலகியிருக்கிறார். இனி புன்னகை பூவே தொடரில் அவர் நடித்து வந்த கதபாத்திரத்தில் ஐஸ்வர்யா என்ற நடிகை தொடர்ந்து நடிக்க உள்ளார்.