எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
'புன்னகை பூவே' சீரியலில் கலைவாணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சைத்ரா சக்காரி. முன்னதாக 2019ம் ஆண்டு ஒளிபரப்பான 'தமிழ்ச்செல்வி' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியிருந்த இவர், கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது கலைவாணி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சைத்ரா, திடீரென இந்த சீரியலை விட்டு விலகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சைத்ரா கன்னடத்தில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'சாரதே' என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தமிழில் வெளியான 'செல்லம்மா' தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சாரதே தொடர் தனக்கு அதிக அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதால் தான் அவர் புன்னகை பூவே சீரியலை விட்டு விலகியிருக்கிறார். இனி புன்னகை பூவே தொடரில் அவர் நடித்து வந்த கதபாத்திரத்தில் ஐஸ்வர்யா என்ற நடிகை தொடர்ந்து நடிக்க உள்ளார்.