இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமி சினிமா தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்துகொண்ட சர்ச்சை சோஷியல் மீடியாக்களில் கொடிமழை செடிமழையாக ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும், மஹாலெட்சுமி பணத்துக்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றசாட்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் மஹாலெட்சுமி கூறும்போது, 'என் அப்பாவும் சினிமாவில் தான் இருக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்', 'பொன்னியின் செல்வன்' என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தெலுங்கில் சங்கர் ஐயா என்றால் அனைவருக்கும் தெரியும். நானும் கூட, 3 சீரியல் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறேன். வசதியாக வாழ எங்களிடம் இருக்கும் பணமே போதும். எனது சம்பளம் மட்டும் 3 லட்சம். இது போதாது என்றா நான் பணத்திற்காக இவரை திருமணம் செய்தேன். நிச்சயம் கிடையாது' என நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளார்.