20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமி சினிமா தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்துகொண்ட சர்ச்சை சோஷியல் மீடியாக்களில் கொடிமழை செடிமழையாக ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும், மஹாலெட்சுமி பணத்துக்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றசாட்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் மஹாலெட்சுமி கூறும்போது, 'என் அப்பாவும் சினிமாவில் தான் இருக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்', 'பொன்னியின் செல்வன்' என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தெலுங்கில் சங்கர் ஐயா என்றால் அனைவருக்கும் தெரியும். நானும் கூட, 3 சீரியல் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறேன். வசதியாக வாழ எங்களிடம் இருக்கும் பணமே போதும். எனது சம்பளம் மட்டும் 3 லட்சம். இது போதாது என்றா நான் பணத்திற்காக இவரை திருமணம் செய்தேன். நிச்சயம் கிடையாது' என நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளார்.