பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இப்போது சினிமாவில் ஆர்வம் காண்பிக்கிறார். பயர் படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். அந்த படமும் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. எக்ஸ்ட்ரீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தார். இப்போது ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் தகவல். அவருக்கு ஹோம்லி முகம் என்பதால் அந்த மாதிரியே அதிக கதைகள் வருகிறதாம்.
'பயர்' படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் இனி அப்படிப்பட்ட கதைகளில் அதிகம் நடிப்பது இல்லை என ரக்ஷிதா முடிவெடுத்து இருக்கிறாராம். இதற்கிடையில், அவரை மையமாக வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை பலர் உருவாக்கி வருகிறார்கள். அவரை வெப்சீரியல்களில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.