எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இப்போது சினிமாவில் ஆர்வம் காண்பிக்கிறார். பயர் படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். அந்த படமும் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. எக்ஸ்ட்ரீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தார். இப்போது ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் தகவல். அவருக்கு ஹோம்லி முகம் என்பதால் அந்த மாதிரியே அதிக கதைகள் வருகிறதாம்.
'பயர்' படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் இனி அப்படிப்பட்ட கதைகளில் அதிகம் நடிப்பது இல்லை என ரக்ஷிதா முடிவெடுத்து இருக்கிறாராம். இதற்கிடையில், அவரை மையமாக வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை பலர் உருவாக்கி வருகிறார்கள். அவரை வெப்சீரியல்களில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.