சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இப்போது சினிமாவில் ஆர்வம் காண்பிக்கிறார். பயர் படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். அந்த படமும் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. எக்ஸ்ட்ரீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தார். இப்போது ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் தகவல். அவருக்கு ஹோம்லி முகம் என்பதால் அந்த மாதிரியே அதிக கதைகள் வருகிறதாம்.
'பயர்' படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் இனி அப்படிப்பட்ட கதைகளில் அதிகம் நடிப்பது இல்லை என ரக்ஷிதா முடிவெடுத்து இருக்கிறாராம். இதற்கிடையில், அவரை மையமாக வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை பலர் உருவாக்கி வருகிறார்கள். அவரை வெப்சீரியல்களில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.