திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
அன்பு மகன் மனோஜ் திடீர் மறைவால் மனம் உடைந்து போய்விட்டார் இயக்குனர் பாரதிராஜா. கடந்த பல வாரங்களாக அவரை சினிமா நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. அவரையும் சினிமாகாரர்கள் சந்தித்ததாக தெரியவில்லை. இசையமைப்பாளர் இளையராஜா அவரை சந்தித்து துக்கம் கேட்டார். பின்னர், அவர் யாரையும் சந்திக்கவில்லை.
பாரதிராஜா எப்படி இருக்கிறார் என்று விசாரித்து பார்த்தால், 'கடந்த 2 மாதங்களாக அவர் சென்னையில் இல்லை. மன ஆறுதலுக்காக மலேசியா கோலம்பூரில் உள்ள மகள் ஜனனி வீட்டில் இருக்கிறார். அங்கே ஓய்வெடுத்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் அவர் நடித்த 'தொடரும்' படம் பெரிய ஹிட். ஆனாலும், மனம், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்போதைக்கு அவருக்கு தேவை அமைதியான மனநிலை என்பதால் குடும்பத்தினர் இந்த முடிவெடுத்து உள்ளனர். எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை' என்கிறார்கள்.