பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
அன்பு மகன் மனோஜ் திடீர் மறைவால் மனம் உடைந்து போய்விட்டார் இயக்குனர் பாரதிராஜா. கடந்த பல வாரங்களாக அவரை சினிமா நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. அவரையும் சினிமாகாரர்கள் சந்தித்ததாக தெரியவில்லை. இசையமைப்பாளர் இளையராஜா அவரை சந்தித்து துக்கம் கேட்டார். பின்னர், அவர் யாரையும் சந்திக்கவில்லை.
பாரதிராஜா எப்படி இருக்கிறார் என்று விசாரித்து பார்த்தால், 'கடந்த 2 மாதங்களாக அவர் சென்னையில் இல்லை. மன ஆறுதலுக்காக மலேசியா கோலம்பூரில் உள்ள மகள் ஜனனி வீட்டில் இருக்கிறார். அங்கே ஓய்வெடுத்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் அவர் நடித்த 'தொடரும்' படம் பெரிய ஹிட். ஆனாலும், மனம், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்போதைக்கு அவருக்கு தேவை அமைதியான மனநிலை என்பதால் குடும்பத்தினர் இந்த முடிவெடுத்து உள்ளனர். எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை' என்கிறார்கள்.