தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
அன்பு மகன் மனோஜ் திடீர் மறைவால் மனம் உடைந்து போய்விட்டார் இயக்குனர் பாரதிராஜா. கடந்த பல வாரங்களாக அவரை சினிமா நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. அவரையும் சினிமாகாரர்கள் சந்தித்ததாக தெரியவில்லை. இசையமைப்பாளர் இளையராஜா அவரை சந்தித்து துக்கம் கேட்டார். பின்னர், அவர் யாரையும் சந்திக்கவில்லை.
பாரதிராஜா எப்படி இருக்கிறார் என்று விசாரித்து பார்த்தால், 'கடந்த 2 மாதங்களாக அவர் சென்னையில் இல்லை. மன ஆறுதலுக்காக மலேசியா கோலம்பூரில் உள்ள மகள் ஜனனி வீட்டில் இருக்கிறார். அங்கே ஓய்வெடுத்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் அவர் நடித்த 'தொடரும்' படம் பெரிய ஹிட். ஆனாலும், மனம், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்போதைக்கு அவருக்கு தேவை அமைதியான மனநிலை என்பதால் குடும்பத்தினர் இந்த முடிவெடுத்து உள்ளனர். எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை' என்கிறார்கள்.