ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

பாரம்பரிய, அரிய வகை நெல்களை பாதுகாத்து வைத்தவர் நெல் ஜெயராமன். 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். விவசாயிகள் மத்தியில் அவருக்கு அப்படியொரு நல்ல பெயர். புற்று நோய் பாதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி 2018ல் காலமானார். அப்போதே அவரை ஆஸ்பத்திரியில் வந்து நலம் விசாரித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் மகன் படிப்பு செலவை ஏற்பதாகவும் வாக்கு கொடுத்து இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை கவனித்தவர், இந்த ஆண்டு அவரை கல்லுாரியில் சேர்த்து இருக்கிறார்.
இது குறித்து முகநுாலில் பதிவிட்டுள்ள நந்தன் பட இயக்குனர் சரவணன், 'பலர் இப்படி வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால், மறந்துவிடுவார்கள். சிவகார்த்திகேயன் 7 ஆண்டுகளாக நெல் ஜெயராமன் மகன் கல்விக்கு உதவி செய்கிறார். தவிர, படிப்பு, பரீட்சை குறித்து அவ்வப்போது அவரிடம் ஆர்வமாக கேட்டு அறிகிறார்'' என்று பதிவிட்டுள்ளார். இதுவரை தான் யாருக்கும் உதவிகள் செய்வதாக சிவகார்த்திகேயன் சொன்னது இல்லை. கல்வி, உதவிகள் விஷயத்தில் பப்ளிசிட்டி தேடியதில்லை.