பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரையின் வில்லி நடிகையான ஸ்வேதா ஸ்ரிம்டன், ஜீ தமிழின் 'சித்திரம் பேசுதடி' மற்றும் 'நினைத்தாலே இனிக்கும்' ஆகிய தொடர்களின் மூலம் மீடியா வெளிச்சத்தை பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். மாடலிங்கில் அறிமுகமாகி திரைத்துறையில் பயணித்து வரும் ஸ்வேதாவுக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. இதற்காக பல வருடங்களாக கடுமையாக முயற்சித்து வந்த ஸ்வேதா, பல குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் உட்பட 'ஆடை' மற்றும் 'நயம்' ஆகிய பாடங்களில் கிளாமராக நடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், திரைப்பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் சீரியலின் பக்கம் திரும்பினார்.
இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது ஹீரோயின் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. இயக்குநர் தம்பி ராமையா இயக்கும் 'ராஜா கிளி' படத்தில் ஸ்வேதா ஸ்ரிம்டன் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள அவர் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு '9 வருட போராட்டத்திற்கு பிறகு என் கேரியரில் அடுத்தக்கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்வேதாவுக்கு சக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.