'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர் 'செம்பருத்தி'. 1400 எபிசோடுகளை கடந்த இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சி அண்மையில் பிரம்மாணடமாக படமாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து சீரியலின் வெற்றி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் செம்பருத்தி சீரியலில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது முக்கிய நடிகர்கள் அனைவரையும் குறித்து மேடையில் பேசப்பட்டது. ஆனால், வில்லியாக நடித்திருந்த வீஜே மவுனிகாவிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் வருத்தமடைந்த வீஜே மவுனிகா தனது இன்ஸ்டாவில் இதை குறிப்பிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ஸ்டோரியில், 'செம்பருத்தி தொடருக்காக எனது பெஸ்டை கொடுத்தேன். ஆனால், சேனல் எனக்கு அதை திருப்பி தரவில்லை. நீங்கள் செம்பருத்தி தொடரின் முதன்மை கதாபாத்திரங்களை கொண்டாடினீர்கள். ஆனால், என்னை ஏன் மதிக்கவில்லை?. என்னை ஏன் அழைக்கவில்லை?. எங்கே எனக்கான விருது?. நீங்கள் என்னை அசிங்கப்படுத்திவிட்டீர்கள். ஆனால், மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர், கொண்டாடுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்கு நன்றி' என கூறியுள்ளார்.
வீஜே மவுனிகா செம்பருத்தி தொடரின் ஆரம்பம் முதல் முடிவு வரை நடித்து கொடுத்துள்ளார். அப்படியிருக்க ஒரு சீரியலின் வில்லி நடிகைக்கு எப்படி தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுக்காமல் போனது என பலரும் மவுனிகாவிற்கு ஆதரவாக கேள்வி கேட்டு வருகின்றனர்.




