பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் |
சின்னத்திரை நடிகையான வனஜா தனது திரையுலக பயணத்தில் சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இன்றுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு அதிக ரீச் கொடுத்தது என்றால் 'மெட்டி ஒலி' தொடரின் லீலா கதாபாத்திரமும், சிங்கம் படத்தில் அவர் நடித்திருந்த பெண் ரவுடி கதாபாத்திரமும் தான். பற்களில் பான்பராக் கறையுடன் பார்ப்பதற்கே முரட்டு பெண்ணாக தோற்றமளித்த வனஜா, படத்தில் சில நிமிட காட்சிகளிலே வந்தாலும் நடிப்பில் மிரட்டியிருப்பார். மெட்டி ஒலியின் லீலா கதாபாத்திரத்திற்கு பிறகு வனஜாவை அதிக பிரபலபடுத்திய கதாபாத்திரம் இதுவே ஆகும். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வனஜா, அதில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
அந்த வீடியோவில், 'அந்த படத்தில் ஏன்டா நடிச்சோம்னு இருக்கும். படத்த பார்த்துட்டு நிறைய பேர் உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைன்னு கேட்டாங்க. அந்த கேரக்டரில் நான் நடிக்க காரணம் ஹரி சார் தான். என் கணவர் ஹரி சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தாரு. எங்களுக்கு அப்போ கல்யாணம் ஆகல. நான் ஷூட்டிங் போகும் போது பான் பராக் போட சொன்னாங்க. நான் முடியவே முடியாது, நடிக்கவே மாட்டேன்னு மறுத்துட்டேன். அந்த படத்தோட முதல் நாளே எனக்கு என் கணவருக்கும் சரியான சண்டை. அப்புறம் என்னோட அப்பா தான் சமாதானம் செஞ்சு என்ன நடிக்க வச்சாரு. ஆனா, மெட்டி ஒலிக்கு அப்புறமா எனக்கு அதிக ரீச் கொடுத்தது சிங்கம் படம் தான்' என கூறியுள்ளார்.