'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? |

சின்னத்திரை நடிகையான வனஜா தனது திரையுலக பயணத்தில் சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இன்றுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு அதிக ரீச் கொடுத்தது என்றால் 'மெட்டி ஒலி' தொடரின் லீலா கதாபாத்திரமும், சிங்கம் படத்தில் அவர் நடித்திருந்த பெண் ரவுடி கதாபாத்திரமும் தான். பற்களில் பான்பராக் கறையுடன் பார்ப்பதற்கே முரட்டு பெண்ணாக தோற்றமளித்த வனஜா, படத்தில் சில நிமிட காட்சிகளிலே வந்தாலும் நடிப்பில் மிரட்டியிருப்பார். மெட்டி ஒலியின் லீலா கதாபாத்திரத்திற்கு பிறகு வனஜாவை அதிக பிரபலபடுத்திய கதாபாத்திரம் இதுவே ஆகும். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வனஜா, அதில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
அந்த வீடியோவில், 'அந்த படத்தில் ஏன்டா நடிச்சோம்னு இருக்கும். படத்த பார்த்துட்டு நிறைய பேர் உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைன்னு கேட்டாங்க. அந்த கேரக்டரில் நான் நடிக்க காரணம் ஹரி சார் தான். என் கணவர் ஹரி சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தாரு. எங்களுக்கு அப்போ கல்யாணம் ஆகல. நான் ஷூட்டிங் போகும் போது பான் பராக் போட சொன்னாங்க. நான் முடியவே முடியாது, நடிக்கவே மாட்டேன்னு மறுத்துட்டேன். அந்த படத்தோட முதல் நாளே எனக்கு என் கணவருக்கும் சரியான சண்டை. அப்புறம் என்னோட அப்பா தான் சமாதானம் செஞ்சு என்ன நடிக்க வச்சாரு. ஆனா, மெட்டி ஒலிக்கு அப்புறமா எனக்கு அதிக ரீச் கொடுத்தது சிங்கம் படம் தான்' என கூறியுள்ளார்.