என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

சின்னத்திரை நடிகையான வனஜா தனது திரையுலக பயணத்தில் சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இன்றுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு அதிக ரீச் கொடுத்தது என்றால் 'மெட்டி ஒலி' தொடரின் லீலா கதாபாத்திரமும், சிங்கம் படத்தில் அவர் நடித்திருந்த பெண் ரவுடி கதாபாத்திரமும் தான். பற்களில் பான்பராக் கறையுடன் பார்ப்பதற்கே முரட்டு பெண்ணாக தோற்றமளித்த வனஜா, படத்தில் சில நிமிட காட்சிகளிலே வந்தாலும் நடிப்பில் மிரட்டியிருப்பார். மெட்டி ஒலியின் லீலா கதாபாத்திரத்திற்கு பிறகு வனஜாவை அதிக பிரபலபடுத்திய கதாபாத்திரம் இதுவே ஆகும். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வனஜா, அதில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
அந்த வீடியோவில், 'அந்த படத்தில் ஏன்டா நடிச்சோம்னு இருக்கும். படத்த பார்த்துட்டு நிறைய பேர் உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைன்னு கேட்டாங்க. அந்த கேரக்டரில் நான் நடிக்க காரணம் ஹரி சார் தான். என் கணவர் ஹரி சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தாரு. எங்களுக்கு அப்போ கல்யாணம் ஆகல. நான் ஷூட்டிங் போகும் போது பான் பராக் போட சொன்னாங்க. நான் முடியவே முடியாது, நடிக்கவே மாட்டேன்னு மறுத்துட்டேன். அந்த படத்தோட முதல் நாளே எனக்கு என் கணவருக்கும் சரியான சண்டை. அப்புறம் என்னோட அப்பா தான் சமாதானம் செஞ்சு என்ன நடிக்க வச்சாரு. ஆனா, மெட்டி ஒலிக்கு அப்புறமா எனக்கு அதிக ரீச் கொடுத்தது சிங்கம் படம் தான்' என கூறியுள்ளார்.