நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகளான தியா சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தார். அதேசமயம் அந்த இரண்டு புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தை உடனடியாக நீக்கியும் விட்டார். இதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் பலர் குழம்பி வந்தனர்.
இந்த நிலையில் முதல் புகைப்படத்தில் நடிகர் சூர்யா தாடியுடன் காணப்படுகிறார். இன்னொரு புகைப்படத்தில் அதே உடையுடன் தாடியை எடுத்துவிட்டு சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திர கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்த நெட்டிசன் ஒருவர் இரண்டையும் வெளியிட்டு, சூர்யா சிங்கம் 4 படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதற்காகத்தான் இந்த கெட்டப் என்றும், அது வெளியில் தெரிந்து விட்டால் படம் குறித்த தகவல் கசிந்துவிடும் என்பதால் உடனடியாக ஜோதிகா அந்த படத்தை நீக்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்த இரண்டு புகைப்படங்களையும், அதில் ஒன்றை ஜோதிகா நீக்கியதையும் பார்க்கும்போது அது சரிதானோ என்று தோன்றுகிறது.