‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் |

நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகளான தியா சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தார். அதேசமயம் அந்த இரண்டு புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தை உடனடியாக நீக்கியும் விட்டார். இதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் பலர் குழம்பி வந்தனர்.
இந்த நிலையில் முதல் புகைப்படத்தில் நடிகர் சூர்யா தாடியுடன் காணப்படுகிறார். இன்னொரு புகைப்படத்தில் அதே உடையுடன் தாடியை எடுத்துவிட்டு சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திர கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்த நெட்டிசன் ஒருவர் இரண்டையும் வெளியிட்டு, சூர்யா சிங்கம் 4 படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதற்காகத்தான் இந்த கெட்டப் என்றும், அது வெளியில் தெரிந்து விட்டால் படம் குறித்த தகவல் கசிந்துவிடும் என்பதால் உடனடியாக ஜோதிகா அந்த படத்தை நீக்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்த இரண்டு புகைப்படங்களையும், அதில் ஒன்றை ஜோதிகா நீக்கியதையும் பார்க்கும்போது அது சரிதானோ என்று தோன்றுகிறது.