ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

மலையாளத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பஷில் ஜோசப் இயக்கியிருந்தார். அதற்கு முன்னதாக அவர் குஞ்சி ராமாயணம், கோதா ஆகிய படங்களை இயக்கி இருந்தாலும் அதன்பிறகு அவரை தேடி நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் வர ஆரம்பித்தன. அவரும் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அப்படி அவரது நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில், சமீபத்தில் வெளியான சூட்சும தர்ஷினி உள்ளிட்ட பல படங்கள் தொடர் வெற்றியையும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
தற்போது வெளியாகி உள்ள பிறாவின்கூடு ஷாப்பு என்கிற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பஷில் ஜோசப். போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை என்பதாலோ என்னவோ, இவர் சிங்கம் பட சூர்யாவை தனக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் படப்பிடிப்பிற்கு தான் வரும் போதெல்லாம் சிங்கம் படத்தின் பின்னணியை இசையை படப்பிடிப்பு தளத்தில் ஒலிக்க விடுமாறு கூறி தினசரி கெத்தாக படப்பிடிப்பிற்கு வந்து சென்றாராம். இந்த தகவலை சமீபத்தில் அவரே ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார்.