நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

மலையாளத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பஷில் ஜோசப் இயக்கியிருந்தார். அதற்கு முன்னதாக அவர் குஞ்சி ராமாயணம், கோதா ஆகிய படங்களை இயக்கி இருந்தாலும் அதன்பிறகு அவரை தேடி நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் வர ஆரம்பித்தன. அவரும் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அப்படி அவரது நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில், சமீபத்தில் வெளியான சூட்சும தர்ஷினி உள்ளிட்ட பல படங்கள் தொடர் வெற்றியையும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
தற்போது வெளியாகி உள்ள பிறாவின்கூடு ஷாப்பு என்கிற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பஷில் ஜோசப். போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை என்பதாலோ என்னவோ, இவர் சிங்கம் பட சூர்யாவை தனக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் படப்பிடிப்பிற்கு தான் வரும் போதெல்லாம் சிங்கம் படத்தின் பின்னணியை இசையை படப்பிடிப்பு தளத்தில் ஒலிக்க விடுமாறு கூறி தினசரி கெத்தாக படப்பிடிப்பிற்கு வந்து சென்றாராம். இந்த தகவலை சமீபத்தில் அவரே ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார்.




