மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாள திரையுலகில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளரும் பின்னர் நடிகராக மாறியவருமான ரமேஷ் பிஷரோடி. இவர் குஞ்சாக்கோ போபன், ஜெயராம் இணைந்து நடித்த பஞ்சவர்ண தத்த என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதனைத் தொடர்ந்து மம்முட்டியின் சில படங்களில் அவருடன் இணைந்து நடித்து அந்த நட்பின் அடிப்படையில் மம்முட்டியை வைத்து ‛கான கந்தர்வன்' என்கிற படத்தையும் இயக்கினார். தொடர்ந்து தற்போது படங்களில் நகைச்சுவை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக மம்முட்டியின் படங்களில் தவறாக இடம் பெறுகிறார்.
அதுமட்டுமல்ல எப்படி மோகன்லால் சுப நிகழ்வுகளுக்கும் துக்க நிகழ்வுகளுக்கும் சென்றால் அவருடன் அவரது நண்பரான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தவறாமல் கூடவே செல்கிறாரோ அதேபோல தற்போது மம்முட்டிக்கும் இப்படி ஒரு துணையாக மாறி நிழல் போல தொடர்கிறார் நடிகர் ரமேஷ் பிஷரோடி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குனருமான எம்.டி வாசுதேவன் நாயர் மரணம் அடைந்தபோது அந்த சமயத்தில் ஊரில் இல்லாத மம்முட்டி சில நாட்கள் கழித்து அவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார். அப்போது உடன் சென்றிருந்தவர் இந்த ரமேஷ் பிஷரோடி தான்.
அதேபோல தற்போது தனது மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன ஜார்ஜ் என்பவரின் மகள் திருமண நிச்சயதார்த்தத்திலும், துல்கர் சல்மான் உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் மம்முட்டி. அப்போதும் இந்த நிகழ்வில் மம்முட்டியுடன் சேர்ந்து ரமேஷ் பிஷரோடி கலந்து கொண்டார். இப்படி இளம் நடிகரும் இயக்குனருமான ஒருவருடன் மம்முட்டி இணைந்து நட்பு பாராட்டி வருவது மலையாளத்தில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.