திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒரு காலத்தில் காமெடி நடிகர்களாக ஒன்றாக இருந்தார்கள். வடிவேலுவின் பல காமெடி காட்சிகளை சிங்கமுத்து எழுதினார். சிங்கமுத்து நடிப்பு தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். வடிவேலுவுக்கும் பல சொத்துகள் வாங்கி கொடுத்தார். இதில் அவர் தன்னை மோசடி செய்துவிட்டதாக வடிவேலு புகார் கூறினார். இது தொடர்பாக இருவரும் மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் சிங்முத்து யு-டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக சிங்கமுத்து தர வேண்டும் என்றும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில், நடிகர் சிங்கமுத்து தனக்கு எதிராக தெரிவித்த அவதூறான கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த வாக்குமூலம் பதிவு அரை மணி நேரம் நடந்தது.
இதையடுத்து சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வக்கீல் “வடிவேலுவை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதை பதிவு செய்து கொண்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
வடிவேலுவின் வாக்குமூலம் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு சிங்கமுத்து தரப்பு மனு செய்யலாம் என்று உத்தரவிட்டது.




