தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! |
வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒரு காலத்தில் காமெடி நடிகர்களாக ஒன்றாக இருந்தார்கள். வடிவேலுவின் பல காமெடி காட்சிகளை சிங்கமுத்து எழுதினார். சிங்கமுத்து நடிப்பு தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். வடிவேலுவுக்கும் பல சொத்துகள் வாங்கி கொடுத்தார். இதில் அவர் தன்னை மோசடி செய்துவிட்டதாக வடிவேலு புகார் கூறினார். இது தொடர்பாக இருவரும் மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் சிங்முத்து யு-டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக சிங்கமுத்து தர வேண்டும் என்றும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில், நடிகர் சிங்கமுத்து தனக்கு எதிராக தெரிவித்த அவதூறான கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த வாக்குமூலம் பதிவு அரை மணி நேரம் நடந்தது.
இதையடுத்து சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வக்கீல் “வடிவேலுவை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதை பதிவு செய்து கொண்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
வடிவேலுவின் வாக்குமூலம் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு சிங்கமுத்து தரப்பு மனு செய்யலாம் என்று உத்தரவிட்டது.