இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒரு காலத்தில் காமெடி நடிகர்களாக ஒன்றாக இருந்தார்கள். வடிவேலுவின் பல காமெடி காட்சிகளை சிங்கமுத்து எழுதினார். சிங்கமுத்து நடிப்பு தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். வடிவேலுவுக்கும் பல சொத்துகள் வாங்கி கொடுத்தார். இதில் அவர் தன்னை மோசடி செய்துவிட்டதாக வடிவேலு புகார் கூறினார். இது தொடர்பாக இருவரும் மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் சிங்முத்து யு-டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக சிங்கமுத்து தர வேண்டும் என்றும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில், நடிகர் சிங்கமுத்து தனக்கு எதிராக தெரிவித்த அவதூறான கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த வாக்குமூலம் பதிவு அரை மணி நேரம் நடந்தது.
இதையடுத்து சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வக்கீல் “வடிவேலுவை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதை பதிவு செய்து கொண்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
வடிவேலுவின் வாக்குமூலம் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு சிங்கமுத்து தரப்பு மனு செய்யலாம் என்று உத்தரவிட்டது.