சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் தமிழா தமிழா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 12 பேருக்கு தமிழா தமிழா விருது வழங்கப்பட்டது.
தன்னலம் கருதாது மக்கள் சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், வானொலி தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுப்பதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சினிமா இயக்குனர்கள் கார்த்திகை செல்வன், த.செ.ஞானவேல், ஆர்ஜே.பாலாஜி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.