பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் தமிழா தமிழா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 12 பேருக்கு தமிழா தமிழா விருது வழங்கப்பட்டது.
தன்னலம் கருதாது மக்கள் சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், வானொலி தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுப்பதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சினிமா இயக்குனர்கள் கார்த்திகை செல்வன், த.செ.ஞானவேல், ஆர்ஜே.பாலாஜி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.