ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் தமிழா தமிழா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 12 பேருக்கு தமிழா தமிழா விருது வழங்கப்பட்டது.
தன்னலம் கருதாது மக்கள் சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், வானொலி தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுப்பதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சினிமா இயக்குனர்கள் கார்த்திகை செல்வன், த.செ.ஞானவேல், ஆர்ஜே.பாலாஜி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.