'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் தமிழா தமிழா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 12 பேருக்கு தமிழா தமிழா விருது வழங்கப்பட்டது.
தன்னலம் கருதாது மக்கள் சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், வானொலி தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுப்பதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சினிமா இயக்குனர்கள் கார்த்திகை செல்வன், த.செ.ஞானவேல், ஆர்ஜே.பாலாஜி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.