'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சின்னத்திரை மற்றும் சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் எலிசபெத் சுராஜ். கனா காணும் காலங்கள். அனுபல்லவி, கலாட்டா குடும்பம், சந்திரலேகா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது போதிய வாய்ப்பு இன்றி தவிக்கும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வாய்ப்பு கேட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது:
சினிமாத்துறை , தொலைகாட்சி துறை அன்பர்களுக்கு, எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை வேற்று மாநில நடிகருக்கு தராதீர்கள். நான் மூழ்கி கொண்டிருக்கிறேன். மரணித்த பின் எனக்காக அழ வேண்டாம். இரங்கல் கடிதம் எழுத வேண்டாம். நான் உயிரோடு இருக்கும்போது உதவி கரம் நீட்டுங்கள். பிழைத்து கொள்வேன் .
நான் சார்ந்த சங்கங்களின் உயர் பதவியில் உள்ளவர்கள் கேட்க தவறியதை நான் கேட்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. என் போன்ற நிறைய நடிகர்களுக்காகவும் ஒலிக்கும் என் குரல். நான் கரை ஏறிய பின் அநேகருக்கு கரம் கொடுப்பேன். என்று எழுதியுள்ளார்.




